வியாழன், நவம்பர் 25, 2010

என்னில் நீ

இமைகளை
இழுத்து மூடிக்கொண்டு
இருள் படர்ந்த
விழிகளுக்குள் - உன்
உருவம் பதித்து
ஒளியூட்டும் - என்
தூக்கம்...

இதயத் துடிப்பின்
இரைச்சலுக்குள் - உன்
இனிய பெயரை
இதமாய் சிறைபிடித்து
உதிரத்தில் கலந்து
உயிரூட்டும் - என்
தனிமை...

பாதச் சுவடுகளை
நட்சத்திரங்களாய்
உதிர்த்து செல்லும்
நிலவின் ஒளியில் - உன்
உருவம் செதுக்கி
விழித்திருக்கும் - என்
இரவு...

அவசரமாய்
ஆடை களைந்து
வியர்வைத் துழிகளை
முத்தமிடும் தென்றலால் - உன்
மெல்லிய ஸ்பரிசத்தை
நினைவுபடுத்தும் - என்
பயணம்...

மாலையில் வீழ்ந்த
கதிரவன் மீண்டு
எழுகையில் - உன்
மலர் முகம் தேடி
உறங்கிக் கொண்டிருக்கும் - என்
விடியல்...

என்னில்
சுவாசம் நிறுத்தி
நெஞ்சச்சதில் - உன்
நினைவதனை புகுத்தி
உயிர் தரும் - என்
சாவு...